உணர்வுகள் உறவுகளை வெல்ல,
உறவுகள் உணர்ச்சிகளைக் கொல்ல
வாழ்க்கைப் பாதையெங்கும்
வெறுப்புகளின் வேர்கள்.
பார்வைகள் அம்புகளாக,
வார்த்தைகள் வம்புகளாக
பத்துக்குப் பத்துபடுக்கையறையில்
பானிபட் யுத்தம்.
எல்லாமே நீ
என்ற உதடுகள்
இன்று
எல்லாத்துக்குமே நீ என்றன.
இல்லத்தில்
எல்லாம் இரண்டாக
உள்ளத்தில்
விருப்பம் ஒன்றானது;
விவாகரத்து.
இரு மன வெறுப்பினால்
திருமணம்அறுந்தது.
தெரியுமா?
கல்யாணம்,
கணவன், மனைவியாய் வாழ...
ஆணும் பெண்ணுமாய் அல்ல.
ஒன்றுதான் புரியவில்லை.
ஒத்துப்போகவில்லைஎன்றவர்கள்,
விவாகரத்துக்கு மட்டுமெப்படி
ஒத்துப்போனார்கள்..???