சமையல் குறிப்பு - கடலை போடுவது எப்படி? ஒரு ஜாலி டிப்ஸ்
தேவையானவை : வெயிட்டான பர்ஸ், செல்போன், 4 /5 சிம்கார்ட் , சகிப்புத்தன்மை, 'ம்ம்ம் சொல்லு' 'சும்மா' 'அப்புறம்' என்ற வார்த்தைகள், கூலிங்கிளாஸ், கிப்ட் பொருட்கள் & இளிச்சவாய நண்பர்கள்.
செய்முறை : அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் அல்லது பர்சின் கனத்தை பொறுத்து பிகர் எனும் பாத்திரத்தை வாங்கிக்கொள்ளவும். பாத்திரத்தை லேடிஸ் காலேஜோ, ஷாப்பிங் ப்ளாசாக்களோ இல்லை வேறு இடமோ அவரவர் வசதிக்கு ஏற்ப சென்று வாங்குவது அவரவர் பொறுப்பு, கம்பெனி எதுவும் செய்யாது. அதனை செல்போன் எனும் அடுப்பை பற்றவைத்து வைத்து சகிப்புத்தன்மை என்னும் சிலிண்டரை இணைத்து கொள்ளவும். அடுப்பு சும்மா எரிந்தாலும் சிலிண்டர் தீரக்கூடாது. சமையல் செய்யும் முன் நாலஞ்சு சிம்கார்ட் கரண்டிகள் வைத்துகொள்வது நன்மை பயக்கும். ஏனெனில் இந்த பதார்த்தத்தின் சுவையே பல்வேறு கரண்டிகள் கொண்டு நிறுத்தாமல் கிண்டுவதிலும் கிளருவதிலும் தான் இருக்கிறது. வாட்ச், கர்சீப், சென்ட், கரடி பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் போன்ற கிப்ட் பொருட்களை அவ்வப்பொழுது பாத்திரத்துக்குள் போட்டு கிளறிக்கொள்ளவும், இல்லையெனில் வெறும் பாத்திரம் சூடாகிவிடும். சமையலின் பொழுது 'ம்ம்ம் சொல்லு' என்ற கருவேப்பிலையையும் 'சும்மா' என்கிற கொத்தமல்லி இலையையும் 'அப்புறம்' என்ற புதினாவையும் நிறுத்தாமல் தூவிக்கொண்டே இருக்கவேண்டும், இல்லையெனில் கடலை பதார்த்தம் சுவை குறைந்து விடும் இல்லை கருகிவிடும். ஒவ்வொரு சமையலின் போதும் பாத்திரத்தின் பெற்றோர்களான பாத்திரகடையை பிடிக்காவிட்டாலும் புகழ வேண்டும், இது பாத்திரத்தை அடுப்பில் இருந்து நழுவ விடாமல் வைக்கும்.
முக்கிய குறிப்பு 1 :
உங்கள் பாத்திரம் பக்கத்தில் இருக்கும் பொழுது கூலிங்கிளாஸ் அணிவது நல்லது, ஏனெனில் நீங்க வேறு பாத்திரத்தை எடுத்து சமைக்கலாம் என எண்ணுவது கையில் இருக்கும் பாத்திரத்துக்கு தெரியக்கூடாது, தெரிந்தால் பாத்திரத்தின் ஆத்திரம் பொங்கிவிடும்.
முக்கிய குறிப்பு 2 :
இங்க முக்கியமே இளிச்சவாய நண்பர்கள் தான்; நீங்க சீரியசாக சமையல் செய்யும்பொழுது உங்கள் அடுப்பு சூடானால் அவங்களிடம் தான் அடுத்த அடுப்பை ஓசி கேட்க வேண்டும்.
முக்கிய குறிப்பு 3: அவரவர் திறமைகேற்ப நாலஞ்சு பாத்திரம் வைத்தும் சமையல் செய்யலாம் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரே பாத்திரத்தில் சமைப்பதே பின் விளைவுகள் இல்லாதது.
படம் ஆரம்பிச்ச பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கிறப்ப, பக்கத்து சீட்டுக்கு பால் காய்ச்ச வரவன், உட்காருவதற்கு முன்னாலையே நம்மள கேட்பான் 'படம் போட்டு எவ்வளவு நேரமாகுது'ன்னு; பத்து நிமிஷமாவது, அதுக்காக போயி சூசைடா பண்ணிக்க போற? படத்த பாக்கத்தானே போற? ஏன்டா கொல்றீங்க? புள்ளையாரு மாதிரி நாலு கை இருந்தாகூட பரவாயில்ல, இருக்கிற ரெண்டு கையில மொத்த குடும்பத்துக்கும் இடைவேளைல அரை டன் பாப்கார்ன வாங்கிட்டு தள்ளாடி போறப்பத்தான், நெருங்கி வந்து 'என்ன சினிமாவுக்கா?'ம்பான் மானஸ்தன் ஒருவன். ஏன்டா டேய்ய்ய்ய், பித்தள பாத்திரம் திருடி பேரீச்சம்பழம் தின்னவனே, தியேட்டர்ல படம் பார்க்க வராம, பாத்ரூம் கழுவவாடா வருவாங்க? சென்னை வானிலை மையம் சொல்ற வானிலை அறிக்கை கூட சிலசமயம் சரியா இருக்கும், ஆனா இந்த தேசத்துல எப்பவுமே சரியா கணிக்க முடியாதது ரயில் வரும் நேரம் தான். எனக்கு தெரிஞ்சு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஏன் ஒரு வருஷம் லேட்டா வந்த ரயிலு கூட இருக்கு. இந்த லட்சணத்துல ரயிலு எப்போ வருமுன்னு காத்திருக்கும் போதுதான், நம்மகிட்ட வந்து 'ரயில் போயிடுச்சா'ம்பான் நல்லவன். ஏன்டா உலுத்துப்போன உளுந்தூர்ப்பேட்டை உலகநாதா, நான் ப்ளாட்பாரத்துல பிச்சை எடுக்கவாடா வந்தேன், ரயில் வந்திருந்தா நான் ஏன்டா இங்க நிக்கறேன்? கல்யாணத்துக்கு வந்தோமா, வண்டி வண்டியா வடைய தின்னோமா, வயிர நப்பினோமான்னு இல்லாம, கை கழுவுறப்ப தான் 'என்ன ரொம்ப வெயிட் போட்டுடீங்கன்னு' கேட்பாங்க, ஆமாயா, சட்ட பாக்கெட்டுல ரெண்டு சிமென்ட் மூட்டை வச்சிருக்கேன், பேன்ட் பாக்கெட்டுல ராணா டார் முறுக்கு கம்பிய சுருட்டி வச்சிருக்கேன், ஏன்யா படுத்தறீங்க பாவிங்களா? பஸ்சுல போடுற மொக்க படத்த அறைதூக்கத்துல முழிச்சு பார்த்துக்கிட்டு இருக்கறப்பத்தான் 'என்ன தூக்கம் வருதா?'ம்பாரு பக்கத்து சீட்டு பழைய சோறு அப்பரண்டீசு; இல்லங்க வாந்தி வருது, உங்க வாஷ் பேசின் மூஞ்சிய காட்டுங்களேன்னு சொல்ல நினைப்பேன். பொண்ணு கிடைக்காம அவனவன் மனசுல புண்ண சுமந்துகிட்டு இருக்கான், இவிங்க விஷேஷத்துல பார்க்கும் போது தான் 'கல்யாணமாயிடுச்சான்னும்பாங்க; ஆமாங்க நாலு தடவை ஆயிடுச்சு, இப்போ அஞ்சாவது முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், உங்க பொண்ணு என்னா பண்ணுதுன்னு கேட்ட தோணும். வேக்காடு தாங்காம மொட்டைமாடிக்கு தூங்க போனா, 'என்ன கரண்ட் கட்டா?'ம்பாரு பக்கத்துக்கு வீட்டுக்காரரு, வர கடுப்புக்கு இல்லைய்யா கே.ஆர்.விஜயா நாடகம் பாக்க வந்தேன்னு சொல்ல நினைப்பேன். கரக்காட்டக்காரன் படத்துல கவுண்டமணி 'என்னை பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட'ன்னு செந்தில எத்தி எத்தி உதைக்கிற மாதிரி, இந்த நிஜ வாழ்க்கையிலும் தேவையற்ற பார்மாலிட்டி
கேள்வி கேட்டே, நம்மள நோகடிக்கவே பொறந்திருக்கிற மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்த வண்டவாளங்கள என்னைக்காவது ஒரு நாள் பதிலுக்கு நாம கடுப்பெத்தாம விடக்கூடாது? இதான் நம்ம வாழ்க்கை லட்சியம்.!
No comments:
Post a Comment