Friday, June 22, 2012

நானே தான்.!

ரத்த உதவி கேட்டு வரும் குறுந்தகவல்களை பார்வேர்ட் மட்டுமே செய்யமுடிகிறது நம்மால். செஸ்ஸையும் சீட்டையும் சக மனிதரோடு விளையாடாமல் கணிப்பொறியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அடுத்த வீட்டுக்காரன் பேர் தெரியாது ஆனா பேஸ்புக்ல ஆயிரம் நண்பர்கள் வைத்திருக்கிறோம். அம்மா / அப்பா மொபைல் நம்பரையே செல்போன் பார்த்து தான் சொல்ல முடிகிறது நம்மால். மருத்துவமனைகளின் பெயர்களைவிட சினிமா தியேட்டர்களின் பெயர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம். நெருங்கிய உறவினர்களுக்கு செய்யும் உதவியைக்கூட மனம் சுளித்தே செய்கிறோம். பஸ்ஸிலோ ரயிலிலோ பலரும் பார்க்க ரசித்து சிற்றுண்டி உண்ண நம்மால் முடிகிறது. அலைபேசியை நோண்டும் நேரம்கூட பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சுவதில்லை. நீண்ட கால நண்பர்களுக்கு சிறு கடனையும் சந்தேகத்தின் பேரிலியே தருகிறோம். ரோட்டில் படுத்து கிடக்கும் கடவுள் ஓவியத்தை மிதிக்காமலும், ஓவியனை மதிக்காமலும் போக கற்றுக் கொண்டோம். கதவை தட்டும் வாட்ச்மேனையும் சிறு சந்தேகமின்றி பார்ப்பதில்லை. வீட்டில் வேலைசெய்யும் அம்மாவை ஒரு முறைக்கூட நமக்கு முன் சாப்பிட வைத்ததில்லை. ஈமெயில், பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் என தொள்ளாயிரம் பாஸ்வர்ட் நிறைத்திருக்கிறது நம் மூளையை, ஆனால் பெற்றவர்களின் பிறந்தநாள் தெரியாது. இப்படியாக, உண்மையில் நண்பா, நான் வாழ்கையை வாழவில்லை. வாழ்வதாய் நினைத்து தேய்ந்து வீழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment