Friday, June 22, 2012

IPL 2012

தட்டு தடுமாறி தாறுமாறா உருமாறி தள்ளாடும் சென்னை அணி, IPL இறுதிபோட்டிக்கு நுழைந்து கோப்பையை தக்கவைக்க சில யோசனைகள்.

சென்னை அணிக்கு மட்டும் இரண்டு முறை பேட்டிங் பிடிக்கும் வகையில் ரெண்டு இன்னிங்க்ஸ் ஆட சொல்லலாம்.
சென்னை பந்துவீசும்பொழுது, எதிரணி மட்டைவீச்சாளர்கள் பேட்டை தலைகீழாக, ஹேண்டில் கீழே இருக்குமாறு பேட் செய்ய ஆணையிடலாம்.
சென்னை அணி பீல்டிங் செய்யும்பொழுது, One Pitch / Two Pitch கேட்ச் பிடித்தாலே எதிரணி பேட்ஸ்மேன் அவுட்டென சொல்லலாம்.
சென்னை பந்துவீசும்பொழுது, ஆறு ஸ்டெம்ப்களாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் அரையடி இடைவெளி விட்டு, பந்து உள்ளே புகுந்தாலே அவுட் என சொல்லலாம்.
சென்னை அணி பேட்டிங் செய்யும்பொழுது எதிரணி பவுலர்களை நெஹ்ரா, விராட் கோலி மற்றும் பியுஷ் சாவ்லா முகங்களை முகமூடி போல அணிந்து பந்து வீச சொல்லலாம்.
எதிரணி பேட் பிடிக்கும்போது, பவுண்டரி கயிறை 20 மீட்டர் தள்ளி வைக்கலாம்.
சென்னை பேட் பிடிக்கும்போது, பவுண்டரி கயிறை 40 மீட்டர் உள்ளே தள்ளி வைக்கலாம்.
சென்னை அணியின் ஒவ்வொரு மூன்று அப்பீலுக்கும் அறுதல் பரிசாக அம்பெயர்கள் ஒரு அவுட் கொடுக்கலாம்.
சென்னை பவுலிங் செய்யும்பொழுது ஓவருக்கு 4 பாலும், அதை ஈகுவல் செய்ய சென்னை பேட் பிடிக்கும்போது ஓவருக்கு 8 பாலும் போடலாம்.
சென்னை அணி பேட் பிடிக்கும்போது, எதிரணி பீல்டர்கள் எல்லோரும் Off side பக்கமே பீல்டிங் நிற்க சொல்லலாம்.
எதிரணி ஒரு விக்கெட் இழந்தாலே, ஆல் அவுட் என அம்பயரை சொல்ல சொல்லலாம்.
எதிரணி பவுலர்கள் 10 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கலாம்.
மிக முக்கியமாக, எதிரணி முதலில் பேட்டிங் பிடித்தால் Power Play முடிந்தவுடன் டிக்ளேர் செய்ய சொல்லலாம்.
இது எதுவுமே சரிப்பட்டுவரவில்லை என்றால், டெல்லி, கொல்கத்தா அணிகளின் பெயரை சென்னை என மாற்றிவிடலாம்.

No comments:

Post a Comment