Friday, June 22, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.!

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வாங்க எந்த விளையாட்டை சேர்க்கலாம்?
A. கப்லிங்க்ஸ் B. ஸ்பூன்லிங்க்ஸ் C. டிக்கிலோனா D. ஜலபுலஜங்

தமிழ்நாட்டில் அடுத்து மாற்றப்படப்போவது எந்த மாவட்ட கலெக்டர்?
A. அரியலூர் B. பொரியலூர் C. துவையலூர் D. சட்னியூர்

பெண்கள் அதிகம் பயன்படுத்துவது எது?
A. தட்கால் B. இடது கால் C. வலது கால் D. மிஸ்ஸுடு கால்

அதிக தீவிரவாதிகளை பிடித்தவர்கள் யார்?
A. ஜார்ஜ் புஷ் B. ஒபாமா C. கேப்டன் D. ஆக்சன் கிங்

கூடாங்குளத்திலிருந்து கரண்ட் வருமா?
A. வரும் B. வராது C. வரும், ஆனா வராது D.கரண்ட் இல்ல அப்புறம் சொல்றேன்

நாம் அடுத்து கொண்டாட கொண்டுவரவேண்டிய தினம் எது?
A. BUS தினம் B. YES தினம் C. MISS தினம் D. KISS தினம்

நடிக்க வராவிட்டால் நடிகைகள் என்னவாகி இருப்பார்கள்?
A. டாக்டர் B. கம்பவுண்டர் C. நர்ஸ் D. கல்யாணம் செய்து அம்மா

மச்சான் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவது யார்?
A. நண்பர்கள் B. மாமன்கள் C. முறை பெண்கள் D. நமிதா

பால் விலை கட்டுப்படியாகததால் இனி வீட்டு பயன்பாட்டுக்கு பாலை எதில் வாங்கலாம்?
A. வாட்டர் கேன் மூடி B. இன்க் பில்லர் C. டீ ஸ்பூன் D. கண்ல பார்த்தா மட்டும் போதுங்க

Home Work செய்யாமல் அம்மாக்களிடம் அதிக திட்டு வாங்குபவர்கள் யார்?
A. மாணவர்கள் B. மாணவியர்கள் C. ஆசிரியர்கள் D. அப்பாக்கள்

ஆயிரம் அறிக்கைகள் விட்ட அபூர்வ சிந்தாமணி தலைவர் யார்?
A. தங்கபாலு B.ராமதாஸ் C. விஜய.டி.ஆர் D. All the above

மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான ஆப்ஷன்களை டைப் செய்து 00000 என்ற எண்ணுக்கு SMS பண்ணுங்க, உங்க பேலன்ஸ்ல எட்டணா போகும், Delivery failure ரிப்போர்ட் வரும். பின்ன என்னங்க? நாட்டுல அவனவன் டெலிபோன் பில்ல, கரண்ட் பில்ல ஏன் மெஸ்சுல சாப்பிட்ட ரெண்டு இட்லி ஒரு வடை பில்ல கூட கட்ட முடியாம நொந்து போயிருக்கான், இதுல தினம் கோட்ட போட்டுக்கிட்டு வந்து நயன்தாரா நாத்தனார யாரு கட்டினா? குஞ்சுமோன் கொழுந்தியாள யாரு கட்டினான்னு, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால் ரேஞ்சுலையே கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு நம்மள டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.! பீ கேர்புல், நாம நமக்கே சொல்லிக்கொள்வோம்.!

குழந்தைகள்.!

குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருப்பதன் காரணம், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதால் மட்டும் தான். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று வகையான குழந்தைகள் இருக்கிறார்கள்; பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் மற்றும் சூப்பர் குழந்தைகள். மற்ற குழந்தைகள் ஸ்கூலுக்கு போவார்கள், சூப்பர் குழந்தைகள் ஷூட்டிங்கும் போவார்கள். மற்ற குழந்தைகள் பாடம் படிப்பார்கள், சூப்பர் குழந்தைகள் படப்பிடிப்பிலும் நடிப்பார்கள், பாட்டு பாடுவார்கள், ஆட்டமும் ஆடுவார்கள். சுமார் குழந்தைகள் பாஸாவார்கள், சூப்பர் குழந்தைகள் பர்ஸ்ட் மார்க் வாங்குவார்கள். நூறுக்கு நான்கு பேர் தான் சூப்பர் குழந்தைகள் எனினும், அவர்களின் தாக்கம் மற்ற குழந்தைகளின் மேல் அதிகம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சூப்பர் குழந்தைகளாக இருக்கவே விரும்புகிறார்கள். சூப்பர் குழந்தைகள் தான் சூப்பராக இருக்க கொடுக்கும் விலைகள் என்ன தெரியுமா பெற்றோர்களே? தங்கள் குழந்தைதனத்தை.!!! ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிடுவதை விட குழந்தைகள் மீதான பெரிய வன்கொடுமை வேறெதுவுமில்லை. நீங்கள் பத்து மாதம் சுமந்து ஒரு முறை தான் பிரசவிக்கிறீர்கள், ஆனால் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பத்து மாதம் பாடம் படித்து ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கிறார்கள்.! மீதமிருக்கும் இரண்டு மாதத்தையும் கோடை வகுப்புகளில் சிறை வைத்து சித்தரவதை செய்யாதீர்கள். இசையோ, நடனமோ, கணினி அறிவோ, யோகாவோ, சதுரங்க ஆட்டதிறனோ, ஹிந்தியோ, ப்ரெஞ்சோ வேறு இரண்டு மாதங்களில் வந்து விடாது. இந்த இரண்டு மாதங்களை குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்த பயன்படுத்துங்கள். கடந்த பத்து மாதம் குழந்தைகளுடன் ஏற்பட்ட இடைவெளியை இந்த இரண்டு மாதங்கள் நிரப்புங்கள். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டு முதலில் நாம் பெரியவர்கள் என காட்டுவோம். புரிந்துக்கொள்ளுவோம், எல்லா குழந்தைகளும் சூப்பர் தான், சூப்பர்களும் முதலில் குழந்தைகள் தான்.!

Wednesday, June 20, 2012

Tele buy

விக்கிற விலைவாசிக்கு வேர்கடலை கூட வாங்கி திங்க முடியாம வெந்து போயி வீட்டுக்கு வந்து டிவிய போட்டா, அத வாங்கு, இத வாங்குன்னு நம்மகிட்ட உதை வாங்காம போகமாட்டாங்க போல சில வெள்ளைக்கார பசங்க. நானும் பார்க்கறேன் 5 வருஷமா அமேசான் காடுகளில் கண்டுப்பிடித்த அரியவகை மூலிகைகளால் செய்யப்பட்ட முடி வளரும் தைலமுன்னு வித்துக்கிட்டு இருக்காங்க. ஏண்டா டேய், அதான் அலைஞ்சு திரிஞ்சு அறிய மூலிகைய கண்டுப்பிடிச்சாச்சுல அப்புறம் உள்ளூர்லையே சாகுபடி பண்ண வேண்டியது தானே? ஒரே வாரத்தில் ஓஹோன்னு முடி வளருமாம். அவ்வளவு பவரான தைலத்த கையில ஊத்தி தலைக்கு தேய்ச்சா உள்ளங்கையில முடி மொளச்சுடாதா முட்டாபசங்களா? தைலம் முடிகளின் அடி ஆழ வேர்கள் வரை செல்லுமாம், மயிறு* வளர்ப்பதை கூட உரம் போட்டு பயிறு வளர்க்கிற மாதிரியே சொல்றாங்களே. எனக்கு தெரிஞ்சு ஒரு அக்கா, அரைக்கால் டவுசர் போட்டுக்கிட்டு ஒன்பது வருஷமா சைக்கிள் ஓட்டி காமிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க ஓட்டுற சைக்கிள பார்த்தா எங்க கொமராபாளையம் குப்பம்மா ஆயா சட்டில மோர் சிலுப்புற மாதிரியே இருக்கும். நல்ல வேளை இந்த கொடுமைய பார்க்கா ஆயா இப்போ இல்லை. அந்தக்கா ஓட்டுன சைக்கிள்ல மட்டும் சக்கரம் இருந்துச்சு, இந்நேரம் அமெரிக்காவுக்கு அஞ்சாறு தடவ போயிட்டு வந்திருக்கலாம். சரி போங்கய்யா எக்சர்சைஸ் பண்ற பொண்ணையாவது மாத்துவாங்கன்னு பார்த்தா நான் அஞ்சாவது படிக்கிறதுல இருந்தே அதே பிகர போட்டு வெறுப்பேத்தறாங்க. இந்நேரம் அது அவங்க ஊர்ல அஞ்சாறு டைவர்சே பண்ணி சந்தோஷமா இருந்துகிட்டு இருக்கும். இன்னொன்னு டிரட்மில்; 30000 ரூபா கொடுத்து டிரட்மில் வாங்கி அது மேல ஓடுனா உடம்பு குறையுமான்னு தெரியாது. ஆனா வெறும் 3000 ரூபா பணத்த யாருக்காவது கடனா கொடுத்துட்டு திருப்பி வாங்க நீங்க நடக்குற நடையில பாதி உடம்பு குறைஞ்சிடும். கடன் வாங்கினவனுக்கே உங்கள அடையாளம் தெரியாது. டீக்கடையில கூட கடன் வைக்கமுடியாத நம்மள நம்பி இந்த நாட்டுல கடன் தர ஒரே குரூப்பு இவங்கதான். டிவில பொருள் விக்கறவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிகிறேன், 24மணி நேரமும் காமடி புரோகிராம் தரத்தான் ஆதித்யா சேனல் இருக்கே, பேசாம நீங்க கடைய சாத்திட்டு போயிடுங்கப்பா, புண்ணியமா போகும்.!

*பின்குறிப்பு: மயிர் என்பது தூய தமிழ் சொல். நல்ல தமிழ் வார்த்தைகளை கொச்சைபடுத்த வேண்டாம் மக்களே. வள்ளுவ பெருமானே சொல்லி இருக்காரு;
" மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்."