Wednesday, June 20, 2012
பட்ஜெட் 2012-2013
நிதியமைச்சர் சார், ஏற்கனவே பால்விலை, மளிகை, பஸ்கட்டணம் உயர்வுன்னு நொறுங்கி போய் வெறும் புல்லையும் கொள்ளையும் தின்கிற குதிரையா வாழுறோம், இது புதுசு புதுசா வரி மேல வரி போட்டு மக்களை வரிக்குதிரையா மாத்திட்டீங்க. தமிழ்நாட்டுல மின்தட்டுப்பாட்டால் அதிக தயாரிப்பில்லாததால் வெளிமாநில சமையல் எண்ணெய் வாங்குனா, அதோட விலைய ஏத்திப்புட்டீங்க, ஆனா பணக்காரர்கள் குடிக்கும் ஓட்ஸ் விலையை குறைக்கறீங்க. மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு வரிய குறைச்சுபுட்டு , மின்சாரத்த மொத்தமா கட் பண்ணிடீங்க, வண்டிய தள்ளிக்கிட்டே தான் போகணும். வீடு கட்டுற செங்கல் சுண்ணாம்பு விலை ஏறுது, ஆனா பூட்டு விலைய குறைச்சு இருக்கீங்க. பால் விலைய குறைப்பீங்கன்னு பார்த்தா, பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் நிப்பிள்கள் விலைய குறைக்கறீங்க, இதானா உங்க டக்கு? எந்த நேரத்துல ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடுன்னு சொன்னீங்களோ, அடுத்த நொடி, தமிழகம் விபரீத விளைவுகளை சந்திக்கும்ன்னு குமாரசாமி அறிக்கை விடறாரு, நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம். மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்ன்னு சொல்றீங்க, ஆனா பள்ளிக்கூட கட்டணத்தை இன்னமும் ஒழுங்கப்படுத்த காணோம்? தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருதெல்லாம் தரீங்க, ஆனா அவங்க எழுதுன புத்தங்களை சுமக்கும் கருவறையான நூலகங்களை மாத்துறீங்க. பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்கீங்க, ஆனா இந்த ஆறுமாசமா சாலைகளில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒன்னும் செய்ய காணோம். 3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்ன்னு சொல்றீங்க, முதல மண் அள்ளுற லாரிகள கட்டுப்படுத்துங்க. ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படுவது ஓகே, அப்படியே பால் விலை ஏறிடுச்சு, ரூ.40 தயிர்கடன் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்.! ஆகா மொத்தம் பட்ஜெட்ட பார்க்கிறப்போ வடிவேலு சொல்ற மாதிரி 'என்னமோ போடா மாதவா'ன்னு நினைக்க தோணுது. நீங்கள் எங்களுக்கு போட்ட நாமம் வாழ்க, நாங்கள் உங்களுக்கு போடப்போகும் நாமம் வாழ்க.!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment