Wednesday, June 20, 2012

கரண்ட் இல்ல.!

நாப்பது டிகிரில வெயில் சுட்டெரிக்குதுன்னு கூலிங்கா ஒரு சோடா கேட்டா, 'கரண்ட் இல்லை, அதனால கூலிங்கா இல்லை'ங்கிறாரு டீக்கடைக்காரர்; ஏம்மா, டேன்க்ல தண்ணி இல்ல, மோட்டார் போடலையா'ன்னு கேட்டா, கரண்ட் இல்லைங்கிறா வீட்டுக்காரம்மா; தமிழ்நாடு மின்சார வாரிய புண்ணியத்துல எல்லோரும் எல்லாத்துக்கும் ஒரு சாக்கு போக்கு பதில வச்சிருக்காங்க. உலகின் ஏதோ ஒரு மூலையில் கரண்ட் கட்டை அனுபவித்துக்கொண்டிருந்தால் நீயும் தமிழனே'ன்னு சேகுவேரா டயலாக்க ரீமிக்ஸ் பண்ணியடிக்குறாங்க. அதனால மக்களே, கீழ்க்கண்ட வழக்கமான கேள்விகளுக்கும்
நீங்க 'கரண்ட் இல்லை'ங்கிற பதில சொல்லி TNEB புண்ணியத்துல தப்பிச்சுக்கலாம்;
ஏன்டா மகனே, +2ல மார்க் குறைஞ்சுது?
தினம் வெறும் இட்லிபொடிதானா? சட்னி அரைக்கலாம்ல?
ஏம்மா டியுஷன் போகாம வீட்டுல உட்கார்ந்திருக்க?
சுவாமிஜி, ஏன் கதவ திறந்து வச்சீங்க?
ஏன் அசைன்மென்ட் எழுதாம வந்திருக்க?
ஏன் மொபைல் சுவிட்ச் ஆப்னே வருது?
சீக்கிரம் வந்துட்டீங்க? ஆபிஸ் போகலையா?
டைம் ஆய்டுச்சு, இன்னமுமா Function 'னுக்கு கிளம்பிக்கிட்டு இருக்க?
யோவ் வேலைக்கு போயா, சும்மா வெட்டியா வீட்டுல உட்கார்ந்திருக்க...
என்னய்யா சொல்ற, உன் பொண்டாட்டியோட கள்ளகாதல் இவ்ளோ நாள் தெரியாதா?
விக்கற விலைவாசிக்கு இன்னொரு குழந்தை தேவையா?
ஆதலால் மக்களே, நம்மை செத்தும் கெடுத்தான் சீதாக்காதி போல சிக்கலில் இருந்து மீட்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நன்றியுடன் ஓ'போடுவோம்.!

No comments:

Post a Comment