Friday, June 22, 2012
காதல்.!
காதல் என்று உலகில் இருக்கிறதா என்று தெரியவில்லை; ஆனால் அதை காதலிப்பவர்கள் எல்லோரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.! செல்போன்களும் சிறு சிறு பொய்களும் பெருகிவிட்ட இன்றைய கணினி யுகத்தில் கண்ணன்களும் கன்னிகளும் காதலுக்கான வரையறைகளை மாற்றிவிட்டனர். காதலை பாதியில் முறிக்கும் ஆண்கள் தியாகியாகிறார்கள்.! காதலை பாதியில் முறிக்கும் பெண்கள் பாவியாகிறார்கள். காதலை மெழுகுவர்த்தி போல உருகி உருகி எரிந்து தீரும் தருவாயில் அந்த நெருப்பிலிருந்தே அடுத்த பத்த வைத்துக்கொள்கிறார்கள். ஆயிரம் பொய் சொல்லி காதலிக்கிறார்கள், ஒரே ஒரு உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிரிந்து போகிறார்கள். காதலை சொல்வது என்பது பத்து மார்க் கொஸ்டீன் போல ஆகிவிட்டது, எப்பவுமே, பசங்க பக்கம் பக்கமா எழுதுகிறார்கள்; பொண்ணுங்க சாய்ஸில் விடுகிறார்கள். இன்றைய தேதியில் காதல் ஒரு கர்ச்சீப்பாகி விட்டது; சிலர் முகம் துடைக்கிறார்கள்,சிலர் கை துடைக்கிறார்கள்,சிலர் மடித்து கடைசிவரை ஒளித்தே வைத்திருக்கிறார்கள். காதல் ஒரு கெட்ட வார்த்தை போல மாற்றிவிட்டதும் காதலர்கள் தான், அதனால் தான் பல பெண்கள் அதை மனசுக்குள் மட்டும் சொல்லிப் பார்க்கிறார்கள். பொண்ணோட மனசு பொண்ணுக்கு தெரியும், ஆணாட மனசு ஆல்கஹாலுக்கு தெரியும்ங்கிற லெவலுக்கு காதல கொண்டுவந்துட்டாங்க. இந்திய இளைஞர்கள், காதலர்களை தெரிந்து வைத்திருக்கும் அளவு, காதலை தெரிந்து வைத்திருக்கவில்லை. கவிபேரரசு வைரமுத்து சொன்னது போல இந்தியா காதலின் தேசம் தான், காதலர்கள் தேசமல்ல.!
Subscribe to:
Post Comments (Atom)
முதல் வரியை திரும்ப திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. காதலுக்கு மட்டுமல்ல இன்னும் பலவற்றிற்கும் அது பொருந்தும் அதிசயம் மேலும் கவர்கிறது..
ReplyDelete