Friday, June 22, 2012

US$ vs INR

ரம்பா தொடை போல மிக வலுவாக இருந்த இந்திய பொருளாதாரமும் ரூபாயின் மதிப்பும், பாட்டி சுட்ட வடையாக குறுகி போனதற்கு காரணம் தமிழர் உதயகுமார் கண்டுபிடித்த புதிய ரூபாய்க்கான சின்னத்தில் இருக்கும் வாஸ்து கோளாரென வடஇந்தியாவில் ஒரு கும்பல் கூவ ஆரம்பித்து இருக்கிறது. இவங்கள சும்மா விடலாமா, அதான் நம்ம பங்குக்கு ஒடிந்து நதியா போல இருக்கும் ரூபாயின் மதிப்பு நமீதா போல ஓங்குதாங்காய் எகிற வாஸ்து, அஸ்டாரலஜி , நியுமராலஜி, நேமாலிஜி, ராசிக்கல் ஜோசியர்களை தோண்டி துருவி நோண்டி நொங்கெடுத்து சில பல ஐடியாக்களை அள்ளி வந்திருக்கேன், இப்போ ஸ்டார்ட் மூஜிக்.

முதல, ரூபாய் நோட்டுல கடவுள் போன்ற காந்தி தாத்தாவ அச்சடிக்கிறதே தப்பாம், என்னாதான் அரைகுறையா அவரு டிரஸ் பண்ணியிருந்தாலும், ஒரு கவர்ச்சி மிஸ்ஸிங்காம். அதனால அம்பது ரூபாய் நோட்டுகளில் அமலாபாலையும், நூறு, ஐநூறு நோட்டுகளில் ஐஸ்வர்யா ராயையும், ஆயிரம் ரூபா நோட்டில் அனுஷ்கா போட்டோவையும் அச்சடிக்கணுமாம். அப்புறம் பார்த்தா ரூபாயின் மதிப்பு தாறுமாறா ஏறிடுமாம்.

நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேருல மிகபெரும் தவறு இருக்காம். நியுமராலஜிப்படி அவரு பேர முரணாப் Figureஜி'ன்னு மாத்திட்டா, ஆட்டோமேட்டிக்கா ரூபாயின் மதிப்பு எகிறி, இந்திய பொருளாதாரம் கெட்ட குத்தாட்டம் போடுமாம்.

பிரபல வாஸ்து நிபுணர் வயலூர் வாய்க்காவாயன் கூற்றுப்படி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பங்கு இருக்காம். அடுத்து வரும் ஆறு மாசத்துக்கு அவரு வாஸ்துபடி உள்பனியன சட்டைக்கு மேலே அணிந்து வாழ்ந்தா ஆசை அஜித் மாதிரி இருக்கும் ரூபாய் மதிப்பு அட்டகாசம் அஜித் மாதிரி ஆயிடுமாம்.

இந்தியா ரூபாய்கள் அச்சடிக்கப்படும் நாசிக் நகர பேரே சரியில்லையாம், ஒன்னு நாசிக்ங்குற பேர Classic'ன்னோ Music'ன்னோ மாத்தனுமாம், இல்லை அந்த நேஷனல் security அச்சகத்த அல்லேக்கா தூக்கி மதுரை ஆதீனத்துக்குள்ள வைக்கணுமாம். அப்புறம் காத்து கருப்பு அண்டாம ரூபாயின் மதிப்பு நட்டகுத்தலா நிக்குமாம்.!

எண்ணூரை சேர்ந்த நியுமராலஜி நிபுணர் நம்பர்நாதன் கூறுகையில், எல்லா ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களும் கூட்டுத்தொகை 9 வருவது மாதிரி அமைத்து அச்சடித்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்.

தேசிய வளர்ச்சியை கொண்டே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரூபாயின் மதிப்பும் இருப்பதால், அதனை செயல்படுத்தும் குழுவை 'திட்ட கமிஷன்' என சொல்ல கூடாதாம், மாறாக 'வாழ்த்து கமிஷன்' என அழைத்துக்கொள்ளலாம். மேலும் அதன் துணைத்தலைவர் அலுவாலியா தன பெயரை சிரிப்புவாலியா என மாற்றிக்கொண்டு தினம் 1000 தடவையென 48 நாள் தொடர்ந்து எழுதிவந்தால் ரூபாயின் மதிப்பு எவரெஸ்டின் உயரத்திற்கு போகுமாம்.

இதையெல்லாம் விட குறுக்கு வழி, ஒரு தடவ சொன்னா நூறு தடவை பண்ணும் சூப்பர்ஸ்டாரின் படத்தை நோட்டுகளில் அச்சடித்தால், ஒரே நாளில் நூறு மடங்கு ரூபாயின் மதிப்பை உயர்த்திவிடலாம்.

No comments:

Post a Comment