Tuesday, August 14, 2012

புள்ளிவிவரம்.!

நேற்று என் மொபைலில் ஒரு குறுந்தகவல் கூவியது. மாநகரங்களில் வாழும் 73.70% இந்தியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனவும், அது போன்றவர்களை குளுகுளுவிக்க கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் ரிசார்ட்டுகள் இருக்கின்றன என்றும். அந்த ரிசாட்டுகளில் என்ன செய்றாங்கன்னு மூக்க நுழைக்காம, இவங்க எப்படி இந்த புள்ளி விவரங்களை அள்ளி விடுறாங்கன்னு மண்டைய மட்டும் குழப்பி, சினிமாவுல புள்ளி விவரங்கள சொல்லி சொல்லியடிக்குற கேப்டன் ரசிகனான என் நண்பன கேட்டேன். அப்போ, பல அதிர்சிகரமான புள்ளி விவரங்கள் கிடைச்சுது... அப்படியே ஷாக் ஆயிட்டேன்..

நாட்டுல 89.56% கணவர்கள் மனைவிகளோடதான் வாழுறாங்களாம் ( யாரோட மனைவின்னு நான் கேட்கல )
84.36% நாய்களும் 78.44% இந்தியர்களும் கரண்ட் கம்பம், டிரான்ஸ்பார்மர் அருகே தான் சிறுநீர் கழிக்கிறாங்களாம்.
93.27% பானி / பேல் பூரிக்கடைகள் சாக்கடை ஓரமாத்தான் இருக்காம்.
98.30% பெண்களின் மொபைகளில் missed கால் போகும் வசதி தான் இருக்காம்.
நாட்டுல 86.66% பேர் டீயோ காபியோ டம்ளாரில் தான் குடிக்கிறாங்களாம்.
78.63% சலூன் கடைக்காரர்களுக்கு வேறொருவர் தான் முடி வெட்டி விடுறாராம்.
பொம்பள புள்ள பேருல Chat பண்ற 65.21% பேரு பொம்பளையே இல்லையாம்.
'வந்துட்டேன் மச்சான், ஆன் தி வே'ன்னு சொல்ற 94.36% பேரு பாத்ரூம விட்ட வெளியே வராதவங்களாம்.
விபத்தை பார்க்கும் 12.25% பேர் 108'க்கு போன் பண்றாங்களாம் ( மீதி பேரு போட்டோ மட்டும் எடுக்கிறாங்களாம் )
உயிர் வாழ்பவர்களில் 98.25% பேர் மூச்சு விடுறாங்களாம், மீதி பேரு கட்டண கழிப்பிடத்தில் மூச்சை தம் பிடித்து அடக்கி இருக்காங்களாம்.
45.65% அரசாங்க ஊழியர்கள் லேட்டாதான் ஆபிஸ் போறாங்களாம், ஏன்னா மேலதிரிகாரியே அப்புறம் தான் வராராம்.

இப்படி நிறையா இருக்காம், ஆனா அவன் கடைசியா சொன்னது தான் வெரி நைஸ்.
இப்படி பட்ட புள்ளி விவரங்கள் 78.92% சதவீதம் தவறாம்.

No comments:

Post a Comment