Wednesday, June 20, 2012

பட்ஜெட் 2012-2013

நிதியமைச்சர் சார், ஏற்கனவே பால்விலை, மளிகை, பஸ்கட்டணம் உயர்வுன்னு நொறுங்கி போய் வெறும் புல்லையும் கொள்ளையும் தின்கிற குதிரையா வாழுறோம், இது புதுசு புதுசா வரி மேல வரி போட்டு மக்களை வரிக்குதிரையா மாத்திட்டீங்க. தமிழ்நாட்டுல மின்தட்டுப்பாட்டால் அதிக தயாரிப்பில்லாததால் வெளிமாநில சமையல் எண்ணெய் வாங்குனா, அதோட விலைய ஏத்திப்புட்டீங்க, ஆனா பணக்காரர்கள் குடிக்கும் ஓட்ஸ் விலையை குறைக்கறீங்க. மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு வரிய குறைச்சுபுட்டு , மின்சாரத்த மொத்தமா கட் பண்ணிடீங்க, வண்டிய தள்ளிக்கிட்டே தான் போகணும். வீடு கட்டுற செங்கல் சுண்ணாம்பு விலை ஏறுது, ஆனா பூட்டு விலைய குறைச்சு இருக்கீங்க. பால் விலைய குறைப்பீங்கன்னு பார்த்தா, பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் நிப்பிள்கள் விலைய குறைக்கறீங்க, இதானா உங்க டக்கு? எந்த நேரத்துல ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடுன்னு சொன்னீங்களோ, அடுத்த நொடி, தமிழகம் விபரீத விளைவுகளை சந்திக்கும்ன்னு குமாரசாமி அறிக்கை விடறாரு, நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம். மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்ன்னு சொல்றீங்க, ஆனா பள்ளிக்கூட கட்டணத்தை இன்னமும் ஒழுங்கப்படுத்த காணோம்? தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருதெல்லாம் தரீங்க, ஆனா அவங்க எழுதுன புத்தங்களை சுமக்கும் கருவறையான நூலகங்களை மாத்துறீங்க. பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்கீங்க, ஆனா இந்த ஆறுமாசமா சாலைகளில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒன்னும் செய்ய காணோம். 3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்ன்னு சொல்றீங்க, முதல மண் அள்ளுற லாரிகள கட்டுப்படுத்துங்க. ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படுவது ஓகே, அப்படியே பால் விலை ஏறிடுச்சு, ரூ.40 தயிர்கடன் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்.! ஆகா மொத்தம் பட்ஜெட்ட பார்க்கிறப்போ வடிவேலு சொல்ற மாதிரி 'என்னமோ போடா மாதவா'ன்னு நினைக்க தோணுது. நீங்கள் எங்களுக்கு போட்ட நாமம் வாழ்க, நாங்கள் உங்களுக்கு போடப்போகும் நாமம் வாழ்க.!

கரண்ட் இல்ல.!

நாப்பது டிகிரில வெயில் சுட்டெரிக்குதுன்னு கூலிங்கா ஒரு சோடா கேட்டா, 'கரண்ட் இல்லை, அதனால கூலிங்கா இல்லை'ங்கிறாரு டீக்கடைக்காரர்; ஏம்மா, டேன்க்ல தண்ணி இல்ல, மோட்டார் போடலையா'ன்னு கேட்டா, கரண்ட் இல்லைங்கிறா வீட்டுக்காரம்மா; தமிழ்நாடு மின்சார வாரிய புண்ணியத்துல எல்லோரும் எல்லாத்துக்கும் ஒரு சாக்கு போக்கு பதில வச்சிருக்காங்க. உலகின் ஏதோ ஒரு மூலையில் கரண்ட் கட்டை அனுபவித்துக்கொண்டிருந்தால் நீயும் தமிழனே'ன்னு சேகுவேரா டயலாக்க ரீமிக்ஸ் பண்ணியடிக்குறாங்க. அதனால மக்களே, கீழ்க்கண்ட வழக்கமான கேள்விகளுக்கும்
நீங்க 'கரண்ட் இல்லை'ங்கிற பதில சொல்லி TNEB புண்ணியத்துல தப்பிச்சுக்கலாம்;
ஏன்டா மகனே, +2ல மார்க் குறைஞ்சுது?
தினம் வெறும் இட்லிபொடிதானா? சட்னி அரைக்கலாம்ல?
ஏம்மா டியுஷன் போகாம வீட்டுல உட்கார்ந்திருக்க?
சுவாமிஜி, ஏன் கதவ திறந்து வச்சீங்க?
ஏன் அசைன்மென்ட் எழுதாம வந்திருக்க?
ஏன் மொபைல் சுவிட்ச் ஆப்னே வருது?
சீக்கிரம் வந்துட்டீங்க? ஆபிஸ் போகலையா?
டைம் ஆய்டுச்சு, இன்னமுமா Function 'னுக்கு கிளம்பிக்கிட்டு இருக்க?
யோவ் வேலைக்கு போயா, சும்மா வெட்டியா வீட்டுல உட்கார்ந்திருக்க...
என்னய்யா சொல்ற, உன் பொண்டாட்டியோட கள்ளகாதல் இவ்ளோ நாள் தெரியாதா?
விக்கற விலைவாசிக்கு இன்னொரு குழந்தை தேவையா?
ஆதலால் மக்களே, நம்மை செத்தும் கெடுத்தான் சீதாக்காதி போல சிக்கலில் இருந்து மீட்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நன்றியுடன் ஓ'போடுவோம்.!

பிட்டு - துட்டு - ஹிட்டு

கர்நாடகா பாஜக அமைச்சர்கள் சட்டசபைக்குள்ள பிட்டு படம் பார்த்த சர்ச்சையே இன்னமும் முடியல; அதுக்குள்ளே குஜராத் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ள பிட்டு படம் பார்த்தாங்கன்னு புது சர்ச்சை வேற. அதுலயும் கர்நாடகால பிட்டு பார்த்த அமைச்சர்கள் வகித்த துறைதான் கவனிப்புக்கு உரியது. ஒருத்தர் 'மகளிர் மற்றும் குழந்தைகள்' நல அமைச்சர், கூட உட்கார்ந்து ஒத்துழைப்பு கொடுத்தது 'கூட்டுறவு துறை' அமைச்சர், பூமாதேவி வாய பொளந்து சிரிச்சுடுவாய்யா . ஏற்கனவே BJP'யின் விரிவாக்கத்த, பயபுள்ளைங்க, 'ப'யங்கர 'ஜொ'ள்ளு 'பா'ர்ட்டின்னு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. பேசாம இனி பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபைய பிட்டுசபைன்னு மாத்திட்டா இன்னமும் கொஞ்சம் எதார்த்தமாவாவது இருக்கும். எது எப்படியோ கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் பங்காரு லட்சுமணன வச்சு 'துட்டு' படம் வந்துச்சு, இப்போ பாஜக மந்திரிகள், எம்எல்ஏக்களை வச்சு 'பிட்டு' படம் வந்திருக்கு, மொத்ததுல எல்லாமே ஹிட்டு படம் தான். இந்தியா ஒளிர்வது இருக்கட்டும், முதல மொபைல் ஸ்கரீன ஒளிர விடாதீங்கப்பு.!