கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வாகனங்களால் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை மூன்றுக்கு மேல். அதிலும் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்ததை விபத்து என்று சொல்வதை காட்டிலும் மர்டர் என சொல்லலாம். அந்த மழலை விழுந்த ஓட்டை, பேருந்தின் ஓட்டையை மட்டுமல்ல, RTO / அரசு அலுவலகங்களின் ஓட்டைகளையும் சேர்த்து நமக்கு காட்டுகிறது. இந்த பேருந்துக்கு அனுமதி தந்த RTO / அரசு அலுவலர்களை கேட்டால் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கைகாட்டலாம். போக்குவரத்து அமைச்சகமோ சாலை சரியில்லாததால் பேருந்துகள் சீக்கிரம் பழுதடைகின்றன என நெடுஞ்சாலைகள் துறையை கைகாட்டும். நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமோ இது பொதுப்பணித்துறையின் கீழ் வரும் சாலை என பொதுப் பணி துறையை கைகாட்டும். பொதுப் பணி துறை அமைச்சகமோ பள்ளிகளையும் பேருந்துகளையும் சரிவர ஆய்வு செய்யவில்லையென பள்ளிக் கல்வி அமைச்சகத்தை கைகாட்டும். பள்ளிகல்வி துறையோ பள்ளிகள் சரிவர ஒத்துழைக்கவில்லை என பள்ளியின் மீதே கை காட்டும். மேலே கூறியது கிண்டலுக்குகில்லை. உண்மை. நாம் தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறோமே தவிர, திருத்திக்கொள்ள பார்ப்பதில்லை. இவர்களை விடுங்கள், பள்ளியில் சேர்ப்பதுடன் நமது கடமைகள் முடிந்து விட்டதென பெரும்பாலானோர் நினைக்கிறோம். பெற்றோர்களாகிய நமக்கு பேராசைகள் இருக்கும் வரை இவர்கள் மேல் தப்பில்லை, நம் குழந்தைகள் பள்ளிகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என ஆராயவும் நமக்கு துப்பில்லை.!
No comments:
Post a Comment