Tuesday, August 14, 2012

பெண்கள் நாட்டின் கண்கள்.!

வரலாறு முக்கியம் அமைச்சர் மான்குனி பாண்டியாரே.!

2011'னாம் வருடம் இந்தியாவில் பதிவான குற்றங்களின் விவரம்.
கொலைகள் - 34305
கொலை முயற்சிகள் - 31385
கற்பழிப்பு - 24206
ஆள்கடத்தல் - 44664
கொள்ளைகள் - 24700
வன்முறைகள் - 68500
வரதட்சனை இறப்புகள் - 8618
பாலியல் துன்புறுத்தல்கள் - 42968
பெண்கள் மீதான வன்முறை - 99135
திருட்டு - 92504
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - 33098

ஆக இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிஷத்திற்கும் ஒரு கொலை நிகழ்கிறது. ஒவ்வொரு 21 நிமிஷத்திற்கும் ஒரு பெண் கற்பழிப்புக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகிறாள். ஒவ்வொரு 11 நிமிஷத்திற்கும் ஒரு இந்தியர் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 7 நிமிஷத்திற்கும் இந்தியாவில் எங்கேயோ ஒரு வன்முறை நடக்கிறது.ஒரு நாளுக்கு 23 பெண்கள் வரதட்சனை கொடுமையால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 5 நிமிஷத்திற்கும் ஒரு பெண் மீது வன்முறை திணிக்கப்படுகிறது.

"பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்" - மகாகவி

ஆதாரம் : http://ncrb.gov.in/

No comments:

Post a Comment